Friday, January 27, 2012

அக்கறைகள்...

என் அக்கறைகள்கூட சமயத்தில்
அவஸ்தைகளாகிப் போகின்றன
உனக்கு....
மௌனமே பதிலாய் அமையும்
உன் எரிச்சலின்
உச்சகட்ட தருணங்களில்...
இல்லாமலே போய்விடுகின்றன
உன் அக்கறைகளும்
மற்றும் என்
அவஸ்தைகளும்



****


கார்களில் பயணிக்கும்
வளர்ப்பு நாய்கள் கூட
குரைக்கின்றன
சாலையில் தொழில்புரியும் 
எளியவர்களைப் பார்த்து.
  

பிரிவின் பதிவு


மலர் உதிரும் மென்மையுடன்தான்
நமது பிரிவினை நீ பதிவு செய்தாய்.
மனம் ஏனோ மருகுகிறது 
மரமே வீழ்ந்தது போல்...


Wednesday, November 16, 2011

மனக்குளத்தில்

மனக்குளத்தில் 
விழுகின்ற 
ஞாபகக் கற்கள் 
கலங்க வைக்கின்றன
கண்களை...

வாழ்க்கை...

தவறவிட்ட வாய்ப்புகளின்
தொகுப்பாய்தான்
தோற்றமளிக்கிறது 
வாழ்க்கை...

Tuesday, August 2, 2011

ஒரு மொட்டு மலரென

ஒரு மொட்டு மலரென
விரிவதற்க்குதான்
எத்தனை சட்டங்கள்
இந்நாட்டில்...

Sunday, July 31, 2011

போகன்வில்லா...

பிழை இலைகள் 
என்று அறிந்திருக்கும் போதும் 
மனம் ஏனோ 
பூவாய்தான் காண்கிறது...