Monday, May 24, 2010

எரிகின்ற நினைவு

கண்ணீரில் தினம் நனைந்து

கரைகின்ற இரவு.

கனவுகளைத் தொலைத்துவிட்டு

வாழ்கின்ற மனது.

கானல் நீராய் தொலைவில்

தெரிகின்ற உறவு.

கைப்பிடிக்க முடியாமல்

தவிக்கின்ற வாழ்வு.

இழப்புகளில் முகம் புதைத்து

எரிகின்ற நினைவு.

பொய்யான வார்த்தைகளில்

ஆன்மாவின் இறப்பு.

0 comments:

Post a Comment