அக்கறைகள்...

என் அக்கறைகள்கூட சமயத்தில்
அவஸ்தைகளாகிப் போகின்றன
உனக்கு....
மௌனமே பதிலாய் அமையும்
உன் எரிச்சலின்
உச்சகட்ட தருணங்களில்...
இல்லாமலே போய்விடுகின்றன
உன் அக்கறைகளும்
மற்றும் என்
அவஸ்தைகளும்



****


கார்களில் பயணிக்கும்
வளர்ப்பு நாய்களும் 
குரைக்கின்றன
சாலையில் தொழில்புரியும் 
எளியவர்களைப் பார்த்து.
  

பிரிவின் பதிவு


மலர் உதிரும் மென்மையுடன்தான்
நமது பிரிவினை நீ பதிவு செய்தாய்.
மனம் ஏனோ மருகுகிறது 
மரமே வீழ்ந்தது போல்...


***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..