பயணங்கள்...

எனது ஒவ்வொரு ரயில் பயணத்திலும்
தொடர்ந்து கொண்டே  இருக்கிறது
உறவாய்  மாறிய
நம் முதல் பயணம்...



மின்னுகின்ற மணற்துகள்கள்...

கடற்கரை மணலில்
பௌர்ணமி இரவில்...
காலம் காலமாய்
மின்னிக் கொண்டிருக்கின்றன
கைவிடப்பட்ட நேசங்களின்
உச்சத்தில் சிதறிய
அன்புத் துகள்கள்...


நான்...

தனியாய் இல்லையெனினும் 
தனிமையில்  இருக்கிறேன்...
புலர் காலை தொடங்கி 
புலன் உறங்கும் நேரம் வரை
துணையாய் நிற்கும் 
நம் உறவின் நினைவுகளை  
அணைத்தபடி உறங்கும் 
என்மேல் 
கவனமாய் இருளைப் போர்த்தி
நகர்கிறது இரவு..
விரலிடை நீராய் 
நழுவிக்கொண்டிருக்கிறது காலம்...
இருந்துகொண்டுதான் இருக்கிறேன் 
நான்...

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..