பூங்கா மரம்

கான்கிரீட் தரையில்
உதிர்கின்றன
அந்தப் பெயர் தெரியாத  மரத்தின்
விதைகள்...
 

காக்கை கூச்சல்

நடைபாதையில் இறந்து கிடக்கும்
சகமனிதனை 
சலனமின்றிக் கடக்கிறேன்...
தொலைவினில் காக்கை கூச்சல்...

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..