முன்னோர்கள்

தலை தொட்டு
ஆசிர்வதிக்கும்
மரங்கள்.

மழை

கரைகிறது
கம்பிகளின் மேல் நிற்கும்
மேகக் கூரை.

மழை


காத்திருக்கிறேன்
மழைநிற்க வேண்டுவது
நியாயமில்லை.

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..