தீயாய்...

தீயாய் என்னுள்ளே
நீநின்று வளர
காடாய் நிறைந்திருக்கும்
தானழிந்து மறையும்.

இலையுதிர் காலம்...

ஒவ்வொரு காற்றிலும் 
உதிர்வதற்க்கென்றே 
முதிர்ந்துகொண்டே இருக்கின்றன 
மரத்தின் இலைகள்.

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..