ஒற்றைப் பூ



ஜனவரி மாத காலையில்
ஜாகரண்டா மரத்தடியில்
உன்னை வரவேற்க
நின்றிருந்தேன் 

கையில்

ஒற்றைப் பூவுடன்..

ஜனவரியில் ஜாகரண்டா

 ஆமாம்....

மரத்திற்கு எப்படித் தெரிந்தது

இன்று

நீ வரப்போவது...

அவள்

பெருமூச்செறிந்தாள்

உமையன்னை.

சிவனுக்கு அவள்

வலம் கொடுத்த கதை

மறந்தே போச்சு

எல்லோருக்கும்.

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..