மழை பெய்யக் கூடும்...


வானம் மீண்டும் கருமையாய் இருக்கிறது...
என் மனம் போன்றே...

எப்போதும் ஒரே மாதிரியே இருப்பதில்லை..
நிராகரிக்கும்போது பாறையாய்
நிராகரிக்கப்படும்போது பாலையாய்..
என் மனம்...

உனக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும்
வெளியில் வெறுமையாய் அலையும்
உனக்கான எனது கரிசனங்கள்
மேகங்களாய்...

வானம் மீண்டும் கருமையாய் இருக்கிறது...

கதவுகள்...

விசும்பலுடன்...

புறங்கையால் விழிநீர் துடைத்து

முகத்தில் அறையப்பட்ட கதவின்முன்

சிதறிக்கிடக்கும் என்னை ஒருவாறாய்

சேகரித்து....

திரும்பிப் பார்த்துக்கொண்டே

தயங்கித் தயங்கி

எனக்காய் திறந்திருக்கும் கதவுகள் நோக்கி

விலகி நடக்கத் தொடங்கி

வெகுநாட்களாகிறது...

ஒவ்வொரு மூடிய கதவையும் கடக்கிறேன்

திறந்து நீ வந்துவிடக் கூடும்

என்னும் அச்சத்துடனேயே...

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..