நிழல்...

இளைப்பாறி முடித்து பின்...

இலையுதிர்காலம்
வந்துவிடக் கூடுமென்று

விலகிச் செல்லும்போது
கூடவே நிழலையும்
எடுத்துச் சென்றுவிட்டாய்.

இலைகள் அடர்ந்திருந்தும்
நிழல் தரமுடியாமல்
இளைப்பாற யாருமற்று
தனித்திருக்கிறேன்...

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..