சுதந்திர தினம்

பட்டொளி வீசிப் பறக்கின்றன

சிறைக்கைதிகள் நெய்த

மூவர்ணக் கொடிகள்...

மார்கழி விடியல்

மார்கழிமாத மரங்களும்

அமைக்கின்றன

பூக்கோலங்களை...

வண்ணங்கள்

பாதையில் தவித்திருந்த 

வண்ணத்துப்பூச்சியை

பூக்களின் அருகில் விட்டேன்.

விரல்நுனிகளில் அதன்

ஆட்டோ கிராப்.

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..