எரிமலைக் குழம்பின்
இரத்தினக் கற்களாய்
உச்சத்தில் பிறக்கும்
உபநிடத சொற்கள் ..
காற்றுக்குதான் எத்தனை கருணை...
மென்மையாய் சுழற்றி
தரை இறக்குகிறது
மரம் நீங்கும்
மலரை சருகை...
காற்றில் மிதந்து
இறங்கிக் கொண்டிருந்த
பழுப்பு வண்ண இலை
சிறகு முளைத்து பறந்தது
பட்டாம்பூச்சியாய்...
ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் ஜன்னலில்...
நிலைத்திருக்கும் விளக்குகள் எல்லாம்பின்னோக்கிச் செல்ல
ஓடும் விளக்குகள் எட்டிப் பிடிக்க முயல
விரைந்துகொண்டிருக்கிறது காலம்...
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..