ஏன் நிகழ்ந்ததென்று தெரியாமலேயே
நாடகமாய் நடந்து முடிந்தது
நமது நேற்றைய சந்திப்பும்.
மழுப்பப்பட்ட வார்த்தைகளும்
மௌனங்களும்
நம்மிடையேயான வெற்றிடத்தை
நிரப்ப முயன்று தோற்றன.
சுடர்ந்துகொண்டிருக்கும் என் அன்பு
முகமூடிகளையும் மீறி
உன்னைத் தொட்டிருக்கும்
நிச்சயமாய்.
மனம் நெகிழ்ந்து தவிக்கிறது
கட்டுக்களை உடைத்து.
அது நேற்றைய பொழுதில்
மட்டுமே சாத்தியமானது என்பது
எனக்குத் தெரியும்.
விடை பெற்ற பொழுதின் வார்த்தைகள்
அர்த்தமிழந்து ஒலிக்கின்றன.
உயிர்த்து மரிக்கிறேன்
நான்.
No comments:
Post a Comment