காலமும் வெளியும் அற்ற
சூனியப் புள்ளி ஒன்று.
சக்தியும் பொருளும் இருக்க
சாத்தியமில்லை அங்கு.
விஞ்ஞான விதிகள் ஏதும்
இல்லாத ஒருமைக் கணம்.
வெடித்தது ஏனோ அன்று
தோன்றிற்று காலமும் வெளியும்.
சக்தியும் பொருளும் எதிராய்
சமைத்தது பிரபஞ்ச உருவை.
அறிவியல் விதிகள் தம்மை
அமைத்துக் கொண்டன தாமே.
எதற்கிந்த மகா பிரளயம்?
எதைநோக்கி இந்தப் பயணம்?
ஏன் இவ்விதம்? இப்படிமட்டும்?
ஒளியும் இருளும் செய்யும் மாயம்.
எத்தனை கோடி நட்சத்திரங்கள்?...
எத்தனை கோடி விண்மீன் கூட்டம்?...
கோடி கோடி கோள்கள் உண்டு...
எத்தனையில் உயிர்கள் உண்டு?
விடைகளைத் தேடத்தேட
மனதினுள்ளும் சூனியப் புள்ளி.
வெடித்திடக் காத்திருக்கிறேன்
ஒருமையில் கலப்பதற்கு.
No comments:
Post a Comment