சந்திப்பு-3

நீ வரும் செய்தி கேட்டு
தீச்சுடர் அணைத்த விட்டிலாய்
திடுக்கிட்டுத் துடிக்கும் நினைவு.
ஒன்றுமே நேராதது போன்று 
காட்டும் உன் முகத்தை 
நானும் அணிய முயன்று 
தோல்வியுறுகிறேன்.
வெறுமையாய் நீண்ட இடைவெளிகளுடன் 
இம்முறையும் கடந்து போகும்.
ஆயாசத்துடன் காத்திருக்கிறேன் 
ஆயத்தங்களோடு...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..