எப்போது நிகழ்ந்ததென்று
தெரியவில்லை.
பத்திரமாய் தான் வைத்திருந்தேன்
நீ விலகிவிட்ட பின்பும் கூட.
தொடர்ந்த உன் புறக்கணிப்பால்
அது தளர்ந்து வந்தாலும்
இறுக்கித்தான் வைத்திருந்தேன்
நினைவுகளால் முடிந்தவரை.
என்றாலும் ஏதோ ஒரு கணத்தில்
நழுவி விட்டது. கூடவே
அதனை காப்பாற்றியாகவேண்டுமே
என்ற என் கவலையும்...
No comments:
Post a Comment