மௌனமாய்...

மௌனமாய் காத்திருக்கிறோம்...
புல்நுனிகளும்
பூவிதழ்களும்
நானும்....

நிலவொளியே உருமாறி
பனித்துளியாய் படிமம் கொண்டு
புள்ளிகளாய் விரிந்திருக்கும்
கோலத்தை முடிக்கும்முன்...
சூரியனாய்
நீவந்து கலைப்பதற்கு...


No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..