மாற்றங்கள்

மனதில் நான் நினைக்கும்போதே
அதனை நீ உணர்ந்த காலங்கள்
தொலைந்து போய்
இப்போதெல்லாம்
குறுந்தகவல்களும்
மின்அஞ்சல்களும் கூட
உன் கண்ணிற்கும் மனதிற்குமான
இடைவெளியில்
காணாமல் போய்விடுகின்றன...
என்றாலும்
கடிதலுககாய் காத்திருக்கிறேன்
நான்.

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..