சந்திப்பு...


காயப்படுத்தும் என்று அறிந்திருந்தும்
கத்தியோடுதான் வருகிறாய் நீ...

நம் சந்திப்பிற்கான
கவசங்களை அணிந்து
ஆயத்தமாய்க் கொண்டிருக்கிறேன்

நிகழ்வின் முதல் கணத்தில்
உனதொரு பார்வை வீச்சில்
யாவும் களையப்பட்டு
காயப்படுவேன் எனத் தெரிந்திருந்தும்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..