விசும்பலுடன்...
புறங்கையால் விழிநீர் துடைத்து
முகத்தில் அறையப்பட்ட கதவின்முன்
சிதறிக்கிடக்கும் என்னை ஒருவாறாய்
சேகரித்து....
திரும்பிப் பார்த்துக்கொண்டே
தயங்கித் தயங்கி
எனக்காய் திறந்திருக்கும் கதவுகள் நோக்கி
விலகி நடக்கத் தொடங்கி
வெகுநாட்களாகிறது...
ஒவ்வொரு மூடிய கதவையும் கடக்கிறேன்
திறந்து நீ வந்துவிடக் கூடும்
என்னும் அச்சத்துடனேயே...
No comments:
Post a Comment