மழை பெய்யக் கூடும்...


வானம் மீண்டும் கருமையாய் இருக்கிறது...
என் மனம் போன்றே...

எப்போதும் ஒரே மாதிரியே இருப்பதில்லை..
நிராகரிக்கும்போது பாறையாய்
நிராகரிக்கப்படும்போது பாலையாய்..
என் மனம்...

உனக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும்
வெளியில் வெறுமையாய் அலையும்
உனக்கான எனது கரிசனங்கள்
மேகங்களாய்...

வானம் மீண்டும் கருமையாய் இருக்கிறது...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..