தனியாய் இல்லையெனினும்
தனிமையில் இருக்கிறேன்...
புலர் காலை தொடங்கி
புலன் உறங்கும் நேரம் வரை
துணையாய் நிற்கும்
நம் உறவின் நினைவுகளை
அணைத்தபடி உறங்கும்
என்மேல்
கவனமாய் இருளைப் போர்த்தி
நகர்கிறது இரவு..
விரலிடை நீராய்
நழுவிக்கொண்டிருக்கிறது காலம்...
இருந்துகொண்டுதான் இருக்கிறேன்
நான்...
No comments:
Post a Comment