குழந்தைகளைத் தொலைத்த வாதாமரங்கள்...

தம்பிதுரை பூங்காவின்
ஒற்றை வாதாமரம்
உதிர்க்கும் பழங்களுக்காய்
காத்திருக்கும் சிறுவர்குழாம் 
இப்போதும் இருக்கிறதென்
பால்ய நினைவுகளில்...

இன்றைக்கும் வாதாமரங்கள்
பழங்களை உதிர்த்து 
காத்திருக்கின்றன...
என்றோ தொலைந்துவிட்ட 
குழந்தைகளுக்காய்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..