பாதை மலர்கள்...

பாதையில் உதிரும் மலர்களின்மேல்
இரக்கமின்றி
செருப்புகள் ஏறிச்சென்றாலும்
மனிதர்கள்மீது
பூக்களைச் சொரிவதைமட்டும்
என்றும் நிறுத்துவதில்லை மரம்...
உன்மீதான உணர்வுகளை உதிர்க்கும்
என் மனம் போலவே...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..